tamilnadu

தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் ஜெ.எஸ்.கே.பாலகுமார் மரணம்

சென்னை, ஜூலை 11 - மூத்த பத்திரிகையாளர் ஜெ.எஸ்.கே.பாலகுமார் உடல் நலக்குறைவால் சனிக்  கிழமையன்று (ஜூலை 11) தனியார் மருத்து வமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 49.  தினமலர் உள்ளிட்டு பல பத்திரிகை களில் 23 ஆண்டுகளாக பணியாற்றிய வந்த வர் ஜெ.எஸ்.கே.பாலகுமார். தினகரன் நாளி தழில் செய்தி ஆசிரியராக இருந்த அவர், உடல் நலக்குறைவு  காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப்  ஜெனலிஸ்ட், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.