சென்னை, ஆக. 3- சென்னையில் மேலும் 3 மாதங்களாவது தற்போதுள்ள நிலை தொடர்ந்தால்தான் நோய் தொற்று பரவலை கணிசமாக குறைக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனி யார் ஹோட்டல் இலவச கொரோனா தனிமை படுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை திங்களன்று (ஆக.3) சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர், தற்போதுள்ள ஊரடங்கு முறை மேலும் 3 மாதங்களாவது தொடர்ந்தால் தான் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதன்பிறகே ஊரடங்கை தளர்த்த முடியும். சென்னைக்கு வருவதற்கான இ-பாஸ் வழங்கும் முறையில் எந்த மாற்ற மும் இல்லை. பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் தொழிலாளர்கள், அவர்க ளது நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம். நாளொன்றுக்கு 1000 இ-பாஸ் விநியோகிக்கப்படுகிறது. சென் னைக்கு வரும் வெளி மாவட்ட தொழிலாளர் கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சம்மந் தப்பட்ட நிறுவனங்கள் செய்திருந்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாத உயிரி ழப்புகளை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிரிழப்புகள் குறைந்திருந்த நிலையில் ஜூன் மாதத்தில் அதிகரித்தது குறித்து வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பல உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் தாமதமாக கிடைப்பதால் கூட எண்ணிக்கை சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.