tamilnadu

இலவச அரிசியை உடனே வழங்க சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி ஏப்.23-இலவச அரசியை உடனடியாக வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுச்சேரி பிரதேசத்தில் அரிசிக்கு பதில்பணம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தரமான அரிசி தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொது மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக அரிசியை வழங்க அரசு முன்வர வேண்டும்.பொது விநியோகமுறையை சீர்குலைக்கும் பாஜக அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக வலுவான போராட்டங் களை நடத்தவும் அனைத்துப் பகுதி மக்களும் முன்வரவேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

;