tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம் தீங்கானது மக்களின் மனதில் பதியவைத்த தோழர்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னையில் திங்களன்று (டிச.23) மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த பேரணியை வெற்றிகரமாக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய சென்னை மாவட்டத்தில் ஞாயிறன்று (டிச.22) பொது மக்களை சந்தித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கப் பட்டன.இந்த பிரசுர பிரச்சார இயக்கத்தை  6 மையங்க ளில் தலைவர்கள், கல்வியாளர்கள், திரைக்கலை ஞர்கள், சமூக ஆர்வலர்கள் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறுசிறு குழுக்களாக பிரிந்து சென்று கட்சி உறுப்பினர்கள் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
உணர்வுபூர்வமாக எழுந்த எதிர்ப்பு
எழும்பூர் பகுதி, நேரு பார்க் குடியிருப்பு அருகே பிரச்சாரத்தை துவக்கி வைத்து அ.சவுந்தரராசன் பேசுகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு இவை இரண்டும் தேவையற்றது. குடியுரிமை திருத்தம், பதிவேடு இல்லாமல்தான் 1955 இல் இருந்து இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது. மக்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய பதிவேடு என தேவையற்ற சர்ச்சைகளை மத்திய அரசு உருவாக்குகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மை யினர் தாக்கப்படுகிறார்கள் என கவலைப்படும் மத்திய அரசு, அரசியல் சட்டத்தை மீறி இந்தியாவில் சிறு பான்மை மக்களை ஒடுக்குவது என்ன நியாயம்? இதற்கெதிராக போராடுபவர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்படோர் பலியாகி யுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள னர். உணர்வுப்பூர்வமாக எழுந்துள்ள எதிர்ப்பை பேசித் தீர்ப்பதற்கு மாறாக அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது என்று குற்றம்சாட்டினார். அதிமுக மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்த தால்தான் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறை வேறியது. நாடாளுமன்றத்தில் வாக்களித்து விட்டு தமிழகத்தில் இரட்டை குடியுரிமை கேட்பதாக நாடக மாடுகிறார்கள் என்றும் கடுமையாக சாடினார். குடி யுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறும் வரை நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எழும்பூர் பகுதிச் செயலாளர் முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு முகம், கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன் (கேரள சமாஜம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் அயன் புரத்தில் பகுதிச்செயலாளர் எம்.ஆர். மதியழகன் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநிலக் குழு உறுப்பினர் க.பீம்ராவ் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ப.சுந்த ரம், இரா.மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துறைமுகம் பகுதிக்குழு சார்பில் ஏழு கிணறு பகுதியில் பகுதிச் செயலாளர் ஜலால் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை பேரா. ஹாஜாகனி துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.வி.கிருஷ்ணன், அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரம் விளக்கு பகுதி, புஷ்பா நகரில் பிரச்சார இயக்கத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி தொடங்கி வைத்தார். அவர் பல இடங்களில் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்தின் கொடூரத்தன்மையை எடுத்துரைத்தார். அவருடன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, வெ.தனலட்சுமி, பகுதிச் செயலாளர் இரணியன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ். மனோன்மணி, எஸ். பாலசுப்பிரமணி யம் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். அண்ணாநகர் பகுதி, எம்எம்டிஏ காலனியில் திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி பிரச்சாரத்தை தொடங்கி வைத்து சமூகப் பிரச்சனைகளில் திரைப் படத்துறையினர் தலையிடவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். பேரா.லெனின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, பகுதிச் செயலாளர் பெ. சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் மகேந்திரவர் மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணி பகுதி, மாட்டாங்குப்பத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தை பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடங்கி வைத்தார். பகுதிச் செயலா ளர் எம்.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரச்சாரம் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் இந்த சட்டத்திற்கு எதிரான மக்களின் மனநிலையை காணமுடிந்தது. சில இடங்களில் மக்கள் இந்த சட்டத்தின் தீங்கை அறிந்திருக்கவில்லை. அதனை தலைவர்கள் விளக்கியபோது இதுபோன்ற சட்டம் தேவையற்றது என்ற கருத்தினை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். சிலர் ஆவேசமாக குரல் எழுப்பி இந்த சட்டத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுபோன்ற பிரச்சாரத்தின் வாயிலாக மக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வழி கிடைத்ததாக இந்த இயக்கத்தில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்.