சென்னை,ஜூன் 9-கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வேளையில், சில காவலர்கள் வாகன விதிகளை மதிப்பதில்லை என்று சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், தலைக்கவசம் அணியாமலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டி னாலோ வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்கு களின் தன்மையைப் பொறுத்து காவலர்கள் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. காவலர்கள் மீதான வழக்குப் பதிவு குறித்த அறிக்கை அன்றாடம் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.