மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர், மக்கள் விரோதப்போக்கை கண்டித்து சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று (நவ. 19) ஆவடியில் துவங்கிய பிரச்சாரப்பயணம், திருவொற்றியூர் பெரியார் நகரில் நிறைவு பெற்றது. இதில் சிஐடியு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயராமன், நிர்வாகிகள் ஏ.ஜி.காசிநாதன், பி.என்.உண்ணி, சு.லெனின்சுந்தர், ரவிச்சந்திரன், இரா.மணிமேகலை, ஏ.எல்.மனோகரன், கே.ஆர்.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.