சென்னை, ஜூன் 9- சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த சிறு வன் பள்ளியில் பாடப்புத்த கத்தில் இடம்பெற்றான். மாற்றப்பட்ட புதிய இரண் டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்ற சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு பள் ளிப்பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த யாசின் என்ற சிறுவன், சாலையில் இருந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இதனையடுத்து அந்த சிறுவனை அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், அந்த சிறுவனின் கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு ஒன்று, இரண்டாம் வகுப்பு பாட புத்த கத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்ப தனை வலியுறுத்தும் வகையில், ஆத்திசூடி - நேர்பட ஒழுகு என்ற தலைப்பின் கீழ் சிறு வன் யாசினின் புகைப்படத்துடன், அவரின் செயல் விளக்கப்பட்டுள்ளது.