tamilnadu

img

இரயில் நிலையத்தில் நடைமேடைக்கும், மின்சார இரயிலுக்கும் இடையில் சிக்கி சிறுவன் பலி  

சேத்துப்பட்டு இரயில் நிலையத்தில் நடைமேடைக்கும், மின்சார இரயிலுக்கும் இடையில் சிக்கி 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.    

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கோபி.  இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரது மகன் பச்சையப்பன் (வயது 11). பச்சையப்பன் வேடந்தாங்கலில் உள்ள தனது தாத்தா ராஜேந்திரனுடன், சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இருவரும் இரயிலிலிருந்து இறங்கி இயற்கை உபாதையை கழித்ததாக தகவல் தெரிகிறது. அதற்குள் இரயில் புறப்பட்டதால் இருவரும் ஓடிச்சென்று இரயிலில் ஏற முயன்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் பச்சையப்பன் நடைமேடைக்கும், மின்சார ரெயிலுக்கும் இடையில் சிக்கி, தாத்தா ராஜேந்திரன் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

அதனைதொடர்ந்து எழும்பூர் ரெயில்வே காவல்துறை சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;