தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
சென்னை, ஜூலை 29- சென்னை வடபழனி தங்கவேல் காலனி வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவரது 13 வயது மகன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுவன் ஞாயிறன்று தனது நண்ப ரான கார்த்திகேயன் என்ப வரோடு சேர்ந்து படிப்பதற் காக வடபழனி அழகிரிநா தர் முதல் தெருவில் உள்ள பிளாசா மேனர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வந்துள்ளார்.
இதையடுத்து சிறுவன் நான்காவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி தனது தோழிக்கு வீடியோ கால் செய்து பேசி யுள்ளார். அப்போது கட்டடத் தின் விளிம்பில் நின்றபடி பேசிய நிலையில் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அருகி லுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றபோது வரும் வழி யிலேயே சிறுவன் உயிரி ழந்து விட்டதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி
சென்னை,ஜூலை 29- திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ் வரர் கோயிலில் ஞாயிறன்று தூய்மை பணி நடைபெற்று வந்தது.
இதில் கோயில் சுத்தம் செய்யும் பணியில் சுமார் 30 பேர் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இவர்களில் கொட்டி வாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவனடியார் பழனி (44) என்பவர் கோயில் கோபுரத் தில் ஏறி சுத்தம் செய்துள் ளார்.
இந்நிலையில் மாலை நேரத்தில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்த பழனி எதிர் பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காய மடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், எதிர்பாராத விதமாக சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தார்.