சென்னை, ஏப். 2 - நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் கண்ட்ரோல் யூனிட்டுக்கும் இடையில் ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபேட் இயந்திர பிரிண்ட்டர் இடம்பெறக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விடுமாறு திமுக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. விவிபேட் இயந்திரம் மூலம் பெறப்படும் ஒப்புகைச் சீட்டு ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசா ரணையை மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப் படும் இவிஎம் இயந்திரத்தில் உள்ள சில குறைபாடுகளை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார்.
இக்கடிதத்தின் மீது இதுவரை தேர்தல் ஆணையம் எவ்வித நட வடிக்கையும் எடுக்காத காரணத் தால், திமுக சுட்டிக் காட்டி இருக் கும் குறைபாடுகளை சரி செய்யக் கோரி, அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி ஏப்ரல் 2 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இதுவரை நடந்த தேர்தல் களில் இவிஎம் - விவிபேட் ஒரே இணைப்பிலும், கண்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்து பயன்படுத்தப் பட்டது. ஆனால், வரும் மக்கள வை தேர்தலில் மூன்றையும் ஒரே இணைப்பில் வைத்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடி வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித் துள்ளது.
மூன்று இயந்திரங்களும் ஒரே இணைப்பில் வைக்கப்படு வதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தேர்தல் விதி களுக்கு எதிரான இந்த நடவடிக் கையை கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இவிஎம் - கண்ட்ரோல் யூனிட் இடையே விவிபேட் இயந்திரம் வைப்பது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்று திமுக தெரி வித்துள்ளது. ஆர்.எஸ். பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனு சென்னை உயர் நீதி மன்றத்தில் விரைவில் விசார ணைக்கு வருகிறது.