tamilnadu

img

அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கல்வி அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம்

அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட வேண்டியும், கல்வி ஆண்டின் தொடக்க காலத்திலேயே இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வலியுறுத்தியும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் தனியார் பள்ளிகளில் கட்டாய நன்கொடை கட்டணக் கொள்ளைகளை தடுத்திட கோரியும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசு பொறுப்பேற்று நடத்த வலியுறுத்தியும் வியாழனன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மாநிலச்  செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   (செய்தி - 3)

;