tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட 24வது மாநாடு சைதாப்பேட்டையில் உற்சாகமாக தொடங்கியது

சென்னை, டிச, 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட 24வது மாநாடு சனிக்கிழமையன்று (டிச.13) தோழர்என்.சங்கரய்யா  (எஸ்பிஎஸ் திருமண்டபம், சைதாப்பேட்டை) நினை வரங்கில் தொடங்கியது

பறை இசை, செந்தொண் டர் அணி வகுப்புடன் தொடங்கிய பொது மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் தலைமை தாங்கி னார்.வேளச்சேரியிலிருந்து, செங்கொடி மற்றும் தோழர் கி.தமிழ்ச் செல்வன் நினைவு கொடிக் கம்பம் கொண்டு வரப் பட்டது. வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமையில் கொண்டு வரப்பட்ட கொடியை மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பாக்கி யமும், கொடிக் கம்பத்தை செயற்குழு உறுப்பினர் பா.பாலகிருஷ்ணனும் பெற்றுக் கொண்டனர்.

நினைவுச்சுடர்

பல்லாவரத்திலிருந்து, பல்லாவரம் பகுதிச் செய லாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் கொண்டு வரப்பட்ட தோழர் பி.ஜீவா நினைவுச்சுடரை செயற்குழு உறுப்பினர் ச.லெனின் பெற்றுக் கொண்டார். ஆலந் தூரிலிருந்து, ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே.வி.சிவக்குமார், இடைக்குழு உறுப்பினர் ஆர்.ராஜசேகர் தலைமையில் கொண்டு வர ப்பட்ட தோழர் எஸ்.ஹேமா வதி நினைவுச்சுடரை செயற் குழு உறுப்பினர் எஸ்.குமார் பெற்றுக் கொண்டார்.

கிழக்கு ஜோதியம்மாள் நகரிலிருந்து சைதை பகுதி க்குழு உறுப்பினர் ஜெ.ஜூலியட் தலைமையில் கொண்டு வரப்பட்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு ச்சுடரை செயற்குழு உறுப்பி னர் ம.சித்ரகலா பெற்றுக் கொண்டார். மேற்கு ஜோதிய ம்மாள் நகரிலிருந்து, சைதை பகுதிக்குழு உறுப்பினர் ஏ.கிரி தலைமையில் கொண்டு வரப்பட்ட தோழர் என்.சங்கரய்யா நினைவுச்சுடரை, பகுதிக் குழு உறுப்பினர் ஒய்.இஸ்மா யில் பெற்றுக்கொண்டார்.

பன்னீர்செல்வம் நகரி லிருந்து சைதை பகுதிக்குழு உறுப்பினர் டி.அன்பரசு தலைமையில் கொண்டு வர ப்பட்ட, தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா நினைவுச் சுடரை வரவேற்புக்குழு துணைத்தலைவர் மு.சா.பெற்றுக் கொண்டார்.

கொடியேற்றம்

இதனை தொடர்ந்து மூத்தத் தலைவர் எஸ்.குமார தாசன் விண்ணதிரும் முழக்க ங்களுக்கிடையே செங் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி அஞ்சலி தீர்மானத்தை வாசி த்தார். வரவேற்புக்குழுத் தலைவர் சைதை ஜெ. வரவேற்றார். கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினார்.

புத்தக வெளியீடு

‘சென்னையில் செங்கொடி வித்துக்களும், விழுதுகளும்’ எனும் நூலை  மூத்தத்தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் வெளியிட, இளம் கம்யூ னிஸ்ட் உறுப்பினர் வே.அனா மிகா பெற்றுக் கொண்டார். பேரா.பிரபாத் பட்நாயக்கின் ‘பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை’ எனும் நூலை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளி யிட, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சுந்தர் பெற்றுக் கொண்டார்.

கவிஞர் ஆ.சி.விஜிதர ணின் ‘மரித்தோர் பாடல்கள் - பாலஸ்தீன் கவிதை தொகுப்பு’ நூலை மூத்தத் தலைவர் மயிலை பாலு வெளியிட, எடிட்டர் க.சரத், ஐ.சரத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பாராட்டு

கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வே.மீனாட்சிசுந்தரம், க.சின் னையா, டி.நந்தகோபால் மற்றும் தீக்கதிர் முன்னாள்  பொதுமேலாளர் சி.கல் யாணசுந்தரம், மூத்தத் தலை வர் கே.என்.கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், இடதுசாரி புத்தகப் பதிப்பாளரான அலைகள் பெ.நா.சிவம் உள்ளிட்டோர் கவுரவிக்கப் பட்டனர். இந்நிகழ்வுகளை செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி ஒருங்கி ணைத்தார்.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேக ரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஆர்.பத்ரி, வே.ராஜ சேகரன் உள்ளிட்டோர் மாநா ட்டில் கலந்து கொண்டனர்.​​​​​​​