சென்னை, ஜூன் 26- போக்குவரத்து கழகத்தில் நடைமுறையில் உள்ள 12 மணி நேர வேலை முறையை ரத்து செய்ய வேண்டும் என போக்கு வரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 53 ஆவது பேரவைக் கூட்டம் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் திரு வொற்றியூரில் நடை பெற்றது. போக்குவரத்து ஊழியர் சங்க துணைத் தலைவர் எம்.முத்துச் செழியன் கொடியேற்றினார். தலைவர் பா.பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் எஸ்.விஜயகுமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணைப் பொதுச் செயலாளர் டி.ஆறுமுகம் வரவேற்றார். சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், பொதுச் செயலாளர் வி.தயானந்தம் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி வரவு-செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், சிஐடியு துணைத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தென் சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் நிறைவுரை யாற்றினார். தண்டையார் பேட்டை-1 பணிமனை செய லாளர் சி.பாண்டி நன்றி கூறினார்.
போக்குவரத்து பணி மனைகளில் குடிநீர், ஓய்வறை, கழிவறை வசதி மேம்படுத்த வேண்டும், கேண்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும், போக்கு வரத்துக் கழகத்தின் வரவுக்கும் – செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், நடத்துநர்கள் பணி செய்வதற்கு தரமான ஈடிஎம் மெஷின் மற்றும் பேப்பர் ரோல் வழங்க வேண்டும், விடுப்பு மறுத்து ஆப்சென்ட் போடும் நடை முறையை திரும்பப்பெற வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய சட்டப்பூர்வ மான பணப்பலன்கள் வழங்க வேண்டும், பஞ்சப்படி அரியர், இஎல் சரண்டர் மற்றும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து கிடைக்க வேண்டிய கடன்கள் வழங்க வேண்டும், நடத்துநர் இருக்கை இல்லா பேருந்து இயக்கத்தை நிறுத்த வேண்டும், சட்டப்படி நடத்து நர் இருக்கை அமைத்து கொடுக்க வேண்டும், தொழில்நுட்பபிரிவில் பழி வாங்கல் நடவடிக்கையை கைவிடவேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிலாளர்களி டம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை போக்குவரத்து நிர்வாகம் சொசைட்டிக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக திருவொற்றி யூர் பணிமனையிலிருந்து துவங்கிய ஊர்வலம் பொன்விழா ஆண்டு மாநாட்டுத் திடலில் நிறை வடைந்தது.
புதிய நிர்வாகிகள்
அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத் தலை வராக டி.துரை, பொதுச் செயலாளராக வி.தயா னந்தம், பொருளாளராக ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்ட 37 பேர் கொண்ட நிர்வாக க்குழு தேர்வு செய்யப்ப ட்டது.