சென்னை,ஆக.08- நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக் கான தொகையைப் பணமாக வழங்கி யும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம்-மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் மருது துரையின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி, அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டுள் ளது. சில மாதங்களுக்கு முன்பு படப் பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தனது பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ஜோதிகா வழங்கியுள்ளார்.
ஜோதிகா சார்பில் மருத்துவ உப கரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா அவர்கள் செய்தி ருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத் தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், “ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்கு கிறேன்” என்றார். “தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெரு மனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களு டன் மக்களின் பங்களிப்பும் கைகோர்க்கும் போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகா அவர்களின் உதவி சரியான முன்னுதாரணம்” என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் மருது துரை தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநி லங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.