சென்னை,செப்.28- தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் சுகாதாரப் பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
தூத்துக்குடி, கரூர், நாமக் கல் ஆகிய மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து கள் மற்றும் நகராட்சிகளில் சுகா தாரப் பணியாளராக பணி யாற்றும் 81 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொ டர்ந்தனர். இந்த மனு சமீபத் தில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடு கையில், தூத்துக்குடி, நாமக் கல் உள்ளிட்ட மாநகராட்சி களுடன் இணைக்கப்பட்ட தற் காலிக ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய தகு தியானவர்கள் என கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ள நிலையில், 81 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், பணி நிரந்தரம் செய்வது குறித்து உயர்நீதிமன்ற உத்த ரவை எதிர்த்து அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது என்றும் கூறினார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும், உயர்நீதி மன்ற அமர்வின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வில்லை. எனவே மூன்று ஆண்டுகள் தற்காலிக பணி செய்து முடித்தவர்கள் நிரந்தர பணி செய்ய தகுதியானவர் கள். அவர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.