tamilnadu

img

சிறு குறு விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

கொரோனா நோய்த்தொற்று கால பேரிடர் நிதியாக சிறு குறு விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் அனைத்து ரேஷன் பொருட்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தாலுகா செயலாளர் புண்ணியமூர்த்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  கோரிக்கை மனு அளித்தார். விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.எஸ்.மகாலிங்கம், துணைத் தலைவர் ஜி.நரசிம்மன் ஆகியோர் உடன் இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.