tamilnadu

img

5 பேர் பலி - மூவரசம்பட்டு குளம் தடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பு!

சென்னையை அடுத்த மூவரசம்பட்டு கங்கை அம்மன் கோயில் குளம் இருக்கும் பகுதியை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது.
சென்னையை அடுத்து மூவரசம்பட்டு கங்கை அம்மன் கோயில் குளத்தில், 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அடுத்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், மூவரசம்பட்டு கங்கை அம்மன் கோயில் குளம் இருக்கும் பகுதியை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது. மேலும்,கோயிலின் நடை மூடப்பட்டு ‘தவிர்க்க முடியாத காரணத்தினால் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.