பெண்ணுக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
தேனி, டிச. 17- தேவாரம் அருகே தே.மூணாண்டிபட்டியில் பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை அளிக்க முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தே.மூணாண்டிபட்டி, பேசியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் ராஜ்குமார்(25). இவர், கடந்த 2019, மே 29 ஆம் தேதி அதே ஊரில் உள்ள தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியி ருந்து வேலை செய்து வரும் பட்டியிலினத்தைச் சேர்ந்த பெண்ணை, தோட்டத்துக்குச் செல்லும் போது வழி மறித்து சாதியைச் சொல்லி திட்டி பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் மீது தேவாரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசா ரணை தேனி தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ராஜ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3,500 அபராதம் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீப்பளித்தார்.
கஞ்சா செடி பறிமுதல்
தேனி, டிச.17- கம்பம் அருகே முல்லையாற்று பகுதியில் கஞ்சா செடி யை பறிமுதல் செய்த போதை மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தலைமறைவான வாலிபரை தேடி வருகிறார்கள்.
கம்பம் அருகே சுருளிப்பட்டி செல்லும் சாலையில் முல்லை ஆற்றுக்கு செல்லும் பாதையில் சுருளிப்பட்டி வனத்துறை பங்களா அருகிலுள்ள வீரணன் மகன் மனோஜ் என்பவர் 10 எண்ணிக்கை கொண்ட 2 அடி உயரம் உள்ள கஞ்சா செடி வளர்த்துள்ளார். மதுவிலக்கு காவல் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் கஞ்சா செடியை பறிமுதல் செய்து இது தொடர்பாக மனோஜை தேடி வருகிறார்.
சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம்
காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக அரசு தகவல்
மதுரை, டிச.17- தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த ஜீவகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கி னைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்தில் 70 ஆயிரம் கையெழுத்து பிரதிகள் உள்ளன. இந்த நூலகத்தின் முக்கியத்துவம் கருதி தமிழ்நாடு கூட்டு றவு சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
நூலகத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாக அலுவலர் பணியிடம் தற்போது காலியாக உள்ளது.
மாவட்ட ஆட்சியரும் முதன்மை கல்வி அலுவலரும் கூடுதல் பொறுப்புகளாக முறையே இயக்குனர், நிர்வாக அலுவலர் பணியிட பொறுப்புகளை நிர்வகித்து வருகின்றனர்.
பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நூலகத்தில் இருக்கும் 22 சிசிடிவி கேமராக்களும் இயங்கவில்லை. பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே நூலகத்தை பராமரிக்க ஏதுவாக அமையும். ஆகவே தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கான இயக்குனர், நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில், அனைத்து பணியிடங்களும் நிரப் பப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
ஒலிபெருக்கி மூலம் மாணவர்களை சிரமத்திற்குள்ளாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை, டிச.17- அரசு பள்ளியின் சுற்றுச்சுவர்களில் அலங்கார விளக்கு களை அமைத்து ஸ்பீக்கர்கள் மூலமாக பாடல்களை ஒலி பரப்பி மாணவர்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆசிரியரின் கோரிக்கை குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நட வடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை பகுதி யில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஏராளமான ஆசிரியைகளும் இப்பள்ளியில் பணி செய்து வரு கின்றனர். சாலைக்கும், பள்ளியின் சுற்றுச்சுவருக்கும் இடையே வெற்றிடம் உள்ளது. இதனை பாதையாக மாண வர்களும், ஆசிரியர்களும் பயன்படுத்தி வந்தனர். இப்பகு தியைச் சேர்ந்த டேவிட்ராஜ் என்பவர் அவரது ஆட்களு டன் அப்பகுதியில் பிளாஸ்டிக் செட்டுகளை அமைத்து அங்கு காத்திருக்கும் மாணவர்களையும், ஆசிரியர்களை யும் மோசமாக திட்டுகின்றார். இதனால் அப்பகுதியைக் கடந்து பள்ளிக்கு வரவே மாணவர்கள் அஞ்சுகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர்களில் அலங்கார விளக்குகளை அமைத்து ஸ்பீக்கர்கள் மூலமாக பாடல்களை ஒலிபரப்பு கிறார். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் தலைமை ஆசிரியை புகார் மனு அளித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆகவே முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு முன்பாக டேவிட்ராஜ் என்ப வரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக அமைப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மரியக் கிளாட் அமர்வு, “ மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க கன்னி யாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.