நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், பேராசிரியருமான போ.மணிவண்ணனுக்கு தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் மேல்குந்தா-அட்டுமண்ணு கிராமத்தைச் சேர்ந்த போ.மணிவண்ணன், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இதுவரையில் இவர் 15 நூல்களை எழுதியுள்ளார். ஊடகத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார். இவர் தனது மொழி மற்றும் கலை இலக்கிய பங்களிப்புகளுக்காக உலகத்தமிழ் மாநாட்டில் சிறந்த கவிஞருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், பேராசிரியர் போ.மணிவண்ணனுக்கு தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு விருது வழங்கியுள்ளார். மேலும், 25,000 ரூபாய்க்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.