tamilnadu

img

ஒரு நொடியில் தமிழக அரசு கவிழும்: மு.க.ஸ்டாலின்

விழுப்புரம், ஏப். 6-விழுப்புரத்தில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் து.ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி விழுப்புரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,“ நீங்கள் போடும் ஓட்டு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்பட்டால் ஒரு நொடியில் தமிழகத்தில் ஆட்சி தானாகவே கவிழும்” என்றார்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம், மத்தியில் மோடியின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி, தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி உதவாகர ஆட்சி, ஒழிக்கப்படும். தலைவர் கலைஞர் இல்லா தேர்தல். ஆனாலும், இந்த தேர்தலில் நாடும் நமதே, நாற்பதும் நமதே என்று தமிழக மக்கள் வெற்றிக் கனியை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதுவரை 30 தொகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டேன். மக்களிடம் நமக்கு ஆதரவு அமோகமாக உள்ளது. சுட்டெரிக்கும் வெய்யிலிலும் நமது பிரச்சாரம் நடைபெறுகிறது. இதுதொடரவேண்டும். ரவிக்குமார் சமூக அக்கறை உள்ளவர். அவரது குரல் மக்களவையிலும் ஒலிக்க வேண்டும். அதற்காக வாக்காளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

;