tamilnadu

img

சலூன் கடைகள் திறப்பு... சென்னையை தவிர

சென்னை:
ஊரக பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், தடை செய்யப்பட்ட இடங்களிலுள்ள சலூன்களை தவிர்த்து பிற முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் இயங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது.இதன்படி, சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, பிற நகர பகுதிகளில் நீண்ட நாள்களுக்கு பிறகு சலூன்கள் கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.சலூன்கள் கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி, முகக்கவசம் அணிந்து பணியாளர்கள் முடி அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

;