tamilnadu

img

தமிழக அரசு பாடப்புத்தகத்தில் காவி முண்டாசுடன் பாரதியார்

தமிழக அரசு சார்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறை வெயிட்டுள்ள  பாடப் புத்தகத்தின் அட்டையில் மகாகவி பாரதியார் காவி முண்டாசுடன் உள்ள படம்  உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாகவி பாரதியார் எப்போதும் தலைப்பாகை அணிந்திருப்பார். அதை தமிழில் முண்டாசு என அழைப்பது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள 12 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தின் அட்டையில் பாரதியாரின் உருவகப் படம் அமைந்துள்ளது. அதாவது அந்த புத்தகத்தின் அட்டையில் ஒரு முண்டாசும் மீசையும் வரையப்பட்டுள்ளன. எப்போதும் வெண்மை நிறத்தில் வரையப்படும்  தலைப்பாகை  இந்த புத்தக அட்டையில் காவிக்  நிறத்தில் காணப்படுகிறது.
இதற்கு கல்வியாளர்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசுப் பள்ளி தமிழாசிரியர் ஒருவர், ”பாரதியாரை காவி தலைப்பாகையும் வரைவது இதுவே முதல் முறையாகும். நான் பல வருடங்களாக பாடம் எடுத்து வருகிறேன். பாரதியாரின் படத்தை பாடப்புத்தகங்களில் வெள்ளை தலைப்பாகையுடன் மட்டுமே நான் கண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை  முன்னாள் அமைச்சர்  தங்கம் தென்னரசு, “பாரதியாரை காவி தலைப்பாகை அணிந்து எப்போதாவது கண்டுள்ளோமா? இது பாடப்புத்தகங்களை காவி மயமாக்கும் சதித் திட்டமாகும். மாணவர்கள் மத்தியில் பாரதியார் குறித்த மாறுபட்ட எண்ணத்தை புகுத்த அரசு செய்யும் சதி ஆகும்” என காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தனது முகநூல் பதிவில் பள்ளிக் “காவி” துறை ! என்று வெளியிட்டுள்ளார். 
இது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். தமிழக பாட புத்தக ஆணையத்தின் தலைவி வளர்மதி, “பாடப்புத்தகங்கள் காவி மயமாக்கப்படுவதாக கூறுவது மிகவும் தவறான தகவலாகும். இது மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப் புத்தகமாகும். இதில் அரசியலும் மதமும் கிடையாது. ஆயினும் இந்த புகார் சரியானதாக இருந்தால் கவனிக்கப்பட்டு திருத்தம் செய்யப்படும்” என தெரிவித்தார்.