tamilnadu

img

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர், “ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்களையும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தாக்குதலை ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
தீவிரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.