tamilnadu

img

புதுக்கோட்டை விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி  அறிவித்துள்ளார்  முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருவள்ளூர், சென்னை சேர்ந்த  2 வேனில்  ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்த வேனும், மற்றொரு காரும் புதுக்கோட்டையில் ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகள்  ஏற்றி சிவகங்கை மாவட்டத்துக்குச் சென்ற  லாரி எதிர்பாராத விதமாக கடை முன்னே நின்ற வேன் மீது மோதியது.

இதையடுத்து அந்த வேன் முன்னால் நின்றிருந்த மற்றொரு வேனையும் மோதித்தள்ளியது. அடுத்ததாக, இந்த வேன் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தை இடித்துத்தள்ளியது.

சிமெண்ட் லாரி மோதிய வேகம் காரணமாக அடுத்தடுத்து நின்ற ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மற்றும் கார் உள்பட 3 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில், வேன்களில் இருந்த திருவள்ளூரை சேர்ந்த ரா. கோகுலகிருஷ்ணன்(28), பனையஞ்சேரியை சேர்ந்த ஜெகநாதன்(60) ம்,அற்றும் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி சாந்தி(49),  சென்னை அமைந்தக்கரையை சேர்ந்த ச. சதீஷ்(25), மதுரவாயலை சேர்ந்த ஜெ.சுரேஷ்(39) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பலத்த காயங்களுடன் 4 பேரும் லேசான காயங்களுடன் 14 பேரும் திருமயம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சிமெண்ட் லாரி ஓட்டுனர்  மணிகண்டன்(39) மீது வழக்குப்பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் .

அதுமட்டுமின்றி பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.