tamilnadu

img

இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு முதல்வர் பெருமிதம்

சென்னை, ஆக. 13- ஒன்றிய கல்வி அமைச்சகம், 2024ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலையங்கள் தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிட்டுள்ளது.

இதில், முதல் 100 கல்வி நிறு வனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதன் வழி, இந்தியாவிலேயே, முதல் 100 கல்வி நிறுவனங்களில் அதிகப்படி யான கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ் நாடு தான் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி, இந்திய அளவில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள் ளது. தமிழ்நாடு அரசின் முன் னெடுப்பு காரணமாக, சென்னை  ஐஐடியில், தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிச மாக உயர்வதும் குறிப்பிடத்தக்க தாய் அமைந்துள்ளது.

மேலும், உயர்கல்வி நிறுவனங் களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டிய லில் தமிழ்நாட்டில் இருந்து 22 பல் கலைக்கழகங்கள் இடம் பிடித்துள் ளன. அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றி யத்தின் (என்ஐஆர்எப்) தரவரிசை பட்டியலில், தமிழ்நாட்டின் உயர் கல்வி நிலையங்கள் முன்னிலை வகித்து, கல்வி தரத்தில் புதிய உச் சத்தை எட்டியுள்ளோம். திமுக அர சின் பெருமைக்குரிய தருணம் இது. இந்தியாவின் வருங்கா லத்தை வழிநடத்தும் நேரம் இது.

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற சிறந்த திட்டங்களால், நம் மாணவர்கள் உயர் கல்வியில் புதிய உச்சங்களை எட்டுவது தொட ரும்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.