tamilnadu

img

6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு

அதிக நச்சுத்தன்மை வாய்ந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக அரசு  ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து அரசாணையைப் பிறப்பித்த நிலையில் தற்போது நிரந்தமாகத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை. .
 இதனால் ஏற்படும் தற்கொலைகளை தடுப்பதற்காக இந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  ப்ரோஃபெனோபாஸ், அசிடேட், மோனோகுரோட்டோபாஸ், குளோர்பைரிஃபோஸ் உள்ளிட்ட ஆறு பூச்சிக்கொல்லிகளுக்கு தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.