தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 12வது மாநாட்டு பொதுக்கூட்டம் வியாழனன்று (செப்.12) சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.அன்பரசு பேசினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சா. டானியல் ஜெயசிங், செயலாளர் இரா. ந. நம்பிராஜன், பொருளாளர் உ. சுமதி, துணைத் தலைவர் எம். வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.