சென்னை,அக்.8- 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை(அக்.8) காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்,
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நிதிஅமைச்சர் தங்கம் தென்ன ரசு செய்தியாளர்களை சந்தித்து கூறுகை யில், தமிழ்நாட்டில் மின்னணு, மென் பொருள், பாதுகாப்பு உபகரணம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உள்ளிட்ட துறைகள் சார்ந்த ரூ.38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 46,931 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்க ப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.