tamilnadu

img

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும்: தேர்வுத்துறை  

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தாலே போதும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது.    

முன்னதாக மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  

பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணிவரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.