அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருக்க வேண்டுமெனத் தனியார்ப் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார்ப் பள்ளி இயக்குநர் கூறியது :
- 2024 - 2025க்குள் அனைத்து தனியார்ப் பள்ளிகளும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
- அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்களுக்குத் தமிழ் மொழியைத் திறம்படக் கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
- 9 -12 ஆம் வகுப்புகளில் கூடுதல் மொழியாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்
ஏற்கனவே 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது 9-12 ஆம் வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.