சென்னை, ஜூலை 28 - ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் போராட்டம் அறிவித்துள்ள தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வருவாய்த்துறையினருக்கு நிவாரணம் கோரி ஆக. 5, 6 தேதிகளில் போராட்டம் நடத்த உள்ளனர். ஊழியர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். கொரோனா மூலமாக உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது முதல்வர் எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என்றார்.