tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டையொட்டி பேச்சுப் போட்டி

புதுச்சேரி,ஜூலை.12- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாட்டை யொட்டி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி புதுச்சேரியில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பிரதேச 3ஆவது மாநாடு வரும் ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் வில்லியனூரில் நடைபெறுகிறது. சாதி ஒழிப்பு என்ற முழக்கத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களிடையே பல்வேறு தலைப்புகளில் பேச்சுபோட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி உழவர்கரை கொம்யூன் தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பிரதேசத் தலைவர் இராச.செயராமன் போட்டியை துவக்கி வைத்து பேசினார். அன்னல் அம்பேத்கர், தந்தை பெரியார் அடித்தளங்களும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கும், இந்திய சமூக நீதி யின் தந்தை அண்ணல் அம்பேத்கர், சாதி ஒழிப்பு,  பெண் விடுதலையில் பகுத்தறிவு பகலவன் பெரியார் என்ற தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு இப்போட்டிகள் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு  முன்னணின் மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன்,  முனைவர்கள் காந்திபிரகாஷ், பெண்ணியம் செல்வக்குமாரி ஆகியோர் கொண்ட குழுவினர் நடுவர்க ளாக இருந்து மாணவர்களை தேர்வு செய்தனர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி செய லாளர் ராமசாமி, நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், நில வழகன், அரிகிருஷ்ணன், ராமக்கிருஷ்ணன், முனி யாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு பரிசுகளு டன் சான்றிதழ்களும், பங்கேற்ற அனைத்து மாண வர்களுக்கும் சான்றிதழ்களும் மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.