tamilnadu

img

ஒரு தனியார் மருத்துவமனையில் காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை

சென்னை அம்பத்தூர் மருத்துவமனையில் காதில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காது அறுவை சிகிச்சைக்காக 9 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அச்சிறுமிக்கு காதுக்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

;