tamilnadu

img

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவா

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதவரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை கண்டித்தும்,  பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்  சார்பில் சென்னை தலைமை அஞ்சலக வளாகத்தில் தபால் கணக்கு மாநிலச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ் தலைமை யில் வெள்ளியன்று (ஆக. 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், பொருளாளர் எம்.எஸ்.வெங்கடேசன், சேமிப்பு அஞ்சலகத் துறை அகில இந்திய பொதுச் செயலாளர் ஜாஸ்மின் ஜலால் பேகம், நிர்வாகிகள் வீரமணி, கே.ராகவேந்திரன், சங்கரன், பத்மநாபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.