tamilnadu

பேனரால் சுபஸ்ரீ பலியான விவகாரம் கவுன்சிலருடன் மேலும் 4 பேர் கைது

சென்னை, செப். 28- சென்னை: பதாகை விழுந்து சுபஸ்ரீ பலி யான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்  வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனு மதியின்றி பதாகை வைத்து இடையூறு செய்த தாக காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஜெய கோபாலை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிகோட்டையில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் வெள்ளியன்று கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.  பதாகை விழுந்து சுபசிறீ மரணம் அடைந்தது தொடர்பாக பதாகை கட்டியவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர். அந்த பகுதியை சேர்ந்த பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோர்தான் சாலை யில் பதாகை கட்டினார்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பதாகை கட்டிய 4 பேரையும் காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சனிக்கிழமை (செப்.28)  ஆலந்தூர் நீதி மன்ற நீதிபதி முன்பு ஜெயகோபால் ஆஜர்  படுத்தப்பட்டார். விதிமுறைகளை மீறி பேனர்  வைத்தது தவறுதான் என  நீதிபதி முன்  தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை அக்டோபர் 11ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க  நீதிபதி உத்தரவிட்டார்.