tamilnadu

img

சு.நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழா

சென்னை, மே 5 -தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (தென்)சென்னை கிளை-2ன் தலைவர் சு.நடராஜன் பணி ஓய்வு பாராட்டு விழாசனிக்கிழமையன்று (மே 4)வேளச்சேரியில் நடைபெற்றது.மின்வாரியத்தில் ஒப்பந்தஊழியராக பணிக்கு சேர்ந்து நிரந்தர ஊழியராக, வேளச்சேரி மேற்கு பிரிவுமுதல் நிலை முகவராக பணியாற்றிய சு.நடராஜன், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம்தேதி ஓய்வு பெற்றார். அவரின் 35 வருட மின்வாரியம் மற்றும் தொழிற்சங்க பணி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-2 ஏற்பாடு செய்திருந்தது.இந்த விழாவில் நடராஜன், சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக 5 ஆயிரம் ரூபாய், மின்கதிர் வளர்ச்சி நிதியாக ஆயிரம் ரூபாய், பெருங்குடி தையல் பள்ளிக்கு ஒரு தையல் எந்திரம் என வழங்கினார்.விழாவிற்கு மத்திய அமைப்பின் சென்னை தெற்கு மண்டல செயலாளர் ஏ.பழனி தலைமைதாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் எஸ்.அப்பனு, மத்தியஅமைப்பின் முன்னாள் மாநில துணைத்தலைவர் எம்.மோகன், துணைப்பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், தி.ஜெய்சங்கர், தென்சென்னை கிளை-2ன் செயலாளர் டி.அன்பழகன், பொருளாளர் ஆர்.லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ், ஒருங்கிணைப்பாளர் ஜி.கவுதம், தென்சென்னை கிளை-1ன் தலைவர் வி.பங்குனியான், செயலாளர் ஏ.முருகானந்தம், திட்டச் செயலாளர்கள் என்.பால்ராஜ் (செங்கல்பட்டு), டி.சீதர் (காஞ்சி), எஸ்.கண்ணன் (மத்தியசென்னை), இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் எம்.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

;