நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி மாணவர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி, ஜூன் 9 - திருநாவலூர் அருகே உள்ள ஆத னூர் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளிக்கு நிரந்தரமாக ஆசி ரியர்களை நியமிக்க கோரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஏற்கெனவே பணி நிறைவு பெற்ற நிலையில், மாதச் சம்பளம் ரூ.10 ஆயிரம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்துள்ளார். இதே போல், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் தற்காலிக ஆசிரியர் ஒருவர் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிகமான முறையில் இரு ஆசி ரியர்கள் பணிபுரிந்து வரும் இப்பள்ளியில், நிரந்தரமான முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அப்பகுதி பொது மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க திங்களன்று (ஜூன் 9) ஆதனூர் பள்ளி மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள் வந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மனு அளிக்க ஒரு சிலரை மட்டுமே அனுமதிப்பதாக கூறியதைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு, அனைவரும் மாவட்ட ஆட்சி யரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொட ர்ந்து, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.