tamilnadu

img

மாணவர்கள் மனு கொடுக்கும் இயக்கம்

  • அரசு கல்லூரிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகளை நடத்த வேண்டும், தனியார் பள்ளிகளில் அநியாய கல்வி கட்டண வசூலை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 5) இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
  • இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆ.சீதாலட்சுமியிடம், நிர்வாகிகள் ராஜேந்திரபிரசாத், இசக்கி, சுதாகர் (வடசென்னை), மிருதுளா, விக்னேஷ், யுவஸ்ரீ (மத்திய சென்னை), சந்துரு, ஆனந்த் (தென்சென்னை) ஆகியோர் மனு அளித்தனர்.
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம், சங்கததின் மாவட்டச் செயலாளர் வசந்த், துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். இதேபோன்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிசிடம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுந்தர், செயலாளர் தமிழ்பாரதி ஆகியோர் மனுவை அளித்தனர்.