tamilnadu

img

விடுதியில் மாணவி மரணம்: தடையை மீறி சிபிஎம் போராட்டம்

சின்னசேலம், செப். 7- சின்னசேலம் புனித சிறுமலர் தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிப் பயின்ற பத்தாம்  வகுப்பு மாணவி தூக்கில் தொங்கிய  நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்ப வத்தில் 6 மாத காலம் முடிந்தும் காவல்துறையினர் விசாரணையை முடிக்காமல் காலம் கடத்துவது ஏன்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பள்ளி விடுதியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி மாணவி பூங்குழலி (16) தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். விடுதியின் காப்பாளர் தொடர்ந்து பூங்குழலியை அவதூறாக பேசி வந்த தாகவும், பிற மாணவர்களையும் இது போல பேசுவதாகவும் பூங்குழலி தனது தாயிடமும் கூறியுள்ளார். மேலும் சம்பவத்தன்று பூங்குழலியின் சடலத்தை அவரது பெற்றோருக்கு தெரியாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பியுள்ள னர். பின்னர் பூங்குழலியின் உடலை எரித்து விடுமாறு பெற்றோரை கட்டாயப்படுத்திதாகவும் கூறப்படு கிறது. மேலும் இதே பள்ளியில் இதற்கு முன்பு 3 மாணவர்கள் இறந்  துள்ளதாக பெற்றோரும், பொதுமக்க ளும் குற்றம் சாட்டுகின்றனர். பூங்குழ லியின் மரணத்தை சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு  செய்த காவல் துறையினர், அதன்பின்  இந்த வழக்கு விசாரணையை துரிதப்  படுத்தாமல் நிலைவையில் போட் டுள்ளனர். 

மேலும், தலித் இனத்தை சேர்ந்த  பூங்குழலியின் மரணத்தில் வன் கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மரணத்துக்கு நியாயம் கேட்டு வந்த பொதுமக்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது வழக்குப் போட்டு தனியார் பள்ளிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவது எதற்காக என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். மாணவி பூங்குழலியின் மர ணத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், மரணத்திற்கு காரணமாக  கூறப்படும் விடுதி நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது  வழக்குப் பதிவு செய்து குற்றவாளி களை கைது செய்ய வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு 15  லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், எஸ்சி, எஸ்டி வன் கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சின்னசேலம் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமையன்று (செப். 7) ஆர்ப்பாட்டம் நடத்த அனு மதி கோரி காவல்துறையிடம் கடந்த  1ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டி ருந்தது.  ஆர்ப்பாட்டத்திற்காக வைக்கப் பட்டிருந்த டிஜிட்டல் பேனரை காவல் துறையினர் அகற்றியுள்ளனர். சனிக்கிழமையன்று ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்க வந்த விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலையிடம் காவல்துறை ஆய்வா ளர் சுதாகர், கள்ளக்குறிச்சி ஆய்வா ளர் விஜயகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த தோடு, இப்பிரச்சினை தொடர்பாக ஊடகத்தினர் பேட்டி எடுக்க வந்த போது அதையும் தடுத்தனர். ஆனாலும் தடையை மீறி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், வட்டச் செயலாளர் டி.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வை. பழனி, ச.சசிக்குமார், இ.அலமேலு, மு.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.