சென்னை, ஜூன் 5 - சென்னையில் பிசிஆர் பரி சோதனையை அதிகப்படுத்த வலி யுறுத்தி மூன்று மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி யுள்ள நிலையில், பரந்துபட்ட அளவில் பரிசோதனைகளை நடத்தி தொற்று பரவலை தடுக்க வேண்டும், பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும், தனியார் மருத்துவ மனைகளை அரசின் கட்டுப் பாட்டில் கொண்ட வந்து தொற் றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், தொற்று உள்ள அனைவரை யும் மருத்துவமனைகளில் அனு மதித்து சிகிச்சை அளிக்க வேண்டும், மக்களுக்கு இலவச மாக முகக்கவசம், கிரிமிநாசினி களை வழங்க வேண்டும், மருத்துவ, தூய்மைப்பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அமைப்புசாரா தொழி லாளர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 6 மாதங்களுக்கு 7500 ரூபாய் நிவா ரணம் தர வேண்டும். நலவாரியத்தின் மூலம் அறி விக்கப்பட்ட நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும், சிறு குறு தொழில்களை ஊக்குவிக்க தமிழக அரசு சிறப்பு தொகுப்பு உதவியை அறிவிக்க வேண்டும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட் டத்தை செயல்படுத்த வேண்டும். மதுரவாயல் பகுதியில் தொற்று அதிகம் உள்ள 144, 145, 148வது வட்டங்களில் வீடுவீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும். தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் நடமாடும் பரி சோதனை மையங்களை பயன் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது.
மதுரவாயல்
மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பகுதிச் செய லாளர் வி.தாமஸ் தலைமை தாங்கி னார். மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன், தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சரவணசெல்வி, எஸ்.கரு ணாகரன், சிஐடியு மாநிலச் செய லாளர் கே.சி.கோபிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதன்பின்னர் வட்டாட்சியர் ஜெயராமனிடம் மனு அளிக்கப் பட்டது.
வேளச்சேரி
வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செய லாளர் கே.வனஜகுமாரி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.குமார், அனீபா, பகுதிக் குழு உறுப்பினர்கள் ரபீக், தமிழ்ச்செல்வன், வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் திவாகர் உள்ளிட்டோர் பேசினர்.
அம்பத்தூர்
சென்னை மாநகராட்சி 90ஆவது வார்டு உதவி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அம்பத்தூர் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி, வடசென்னை மாவட் டக்குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.