சம வேலைக்கு சம ஊதியம், தொழிற்சங்க உரிமை உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி சிஐடியூ சார்பில் மீஞ்சூரில் இருசக்கர வாகன பிரச்சாரம் செவ்வாயன்று (நவ.19) நடைபெற்றது. அத்திப்பட்டு புதுநகரில் பிரச்சார இயக்கத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் துவக்கிவைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் நரேஷ், வடசென்னை அனல்மின் நிலையம் சிஐடியு நிர்வாகிகள் சுந்தரம், ஜெயவேல், வெங்கடேசன், வெங்கட் ஐயா, கதிர்வேல், அருள்நாதன், சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரச்சார இயக்கம் மீஞ்சூர் பஜாரில் நிறைவுபெற்றது.