tamilnadu

img

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முடிக்காத ஆண்ட்ரூயூல் நிர்வாகத்தைக் கண்டித்து வேலைநிறுத்தம்

28 மாதமாக ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முடிக்காத ஆண்ட்ரூயூல் நிர்வாகத்தைக் கண்டித்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இப்போராட்டத்தின் 20வது நாளான சனிக்கிழமையன்றும் (செப்.7) அந்நிறுவன வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் எஸ்.அப்பனு தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, பொருளாளர் ஏ.பழனி, மத்திய அரசு பொதுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜயன், மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.தயாளன், பெருங்குடி பொதுத்தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.விஜயக்குமார், கிளம் மற்றும் மருத்துவமனை சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி  உள்ளிட்டோர் பேசினர்.