உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு இன்றும் (ஏப்.25), நாளையும் (ஏப்.26) நடைபெறுகிறது. இந்த மாநாட்டை காலை 11.30 மணிக்கு தொடங்கிவைத்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் துவக்க உரையாற்றவுள்ளார். இந்த நிலையில், தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, 41 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 9 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.