tamilnadu

img

பள்ளிகளில் பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்க பரிந்துரை!

பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது வரையறுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்க, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. தில்லி உயர்நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி முருகேசன்‌ தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு மாநிலத்துக்கென புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குழுவின் அவகாசம் நீட்டிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது வரையறுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும், பள்ளிகளில் இயங்கும் பயிற்சி மையங்கள், பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்காமலேயே, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதாக இக்குழு தெரிவித்துள்ளது.