சென்னை, ஜூன் 12- சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 81ஆவது மருத்துவ பட்டப் படிப்பு நிறைவு விழா புதனன்று நடை பெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், 1934ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவப் பள்ளியாக இருந்து 1938ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் பெற்று, 38 துறைகளுடன் இயங்கி வருகிறது. 1948ஆம் ஆண்டு பிறவிலேயே ஏற்படும் PDA என்னும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு முதன் முதலாக வெற்றி கரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1971ஆம் ஆண்டில் கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து இன்று வரை “ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை” செய்யும் சிறந்த மருத்துவமனையாக உள்ளது.
1995ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உணவுக் குழாயில் ஏற்படும் கோளாறுகளை கண்டறியும் கருவி யான Oesophageal Manometry மற்றும் 2004ஆம் ஆண்டு Laparoscopy எனப்படும் “நுண்வழி அறுவை சிகிச்சை“ வசதி கொண்ட முதல் அரசு மருத்துவமனையாக உள்ளது என்றும் பி.சி.ராய் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சேஷையா, நடமாடும் மருத்துவக் களஞ்சி யம் என்று அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது பெற்ற திருவேங்கடம், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறையை ஸ்டான்லியில் தோற்று வித்த வெங்கடசுவாமி உள்ளிட்ட பல தேசிய விருது, பத்மஸ்ரீ விருது பெற்ற, புகழ்பெற்ற பல மருத்துவர்கள் இந்த மருத்துவ மனையில் பயின்றவர்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்கு மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.