tamilnadu

img

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது: ஸ்டாலின் ஆவேசம்

சென்னை:
திமுக மாவட்ட செயலாளர் கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், அந்த பொய் வழக்குகளை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் ஞாயிறன்று (மே 24) காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

“அதிமுக அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் திமுக தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும், அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்” என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும், சட்ட நெறிமுறைகளை தமது விருப்பத்திற் கேற்ப வளைத்து, பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

;