சென்னை,ஜன.12- இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும்என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல் வர் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை எழும்பூரில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், சண்முகம் உள்ளிட்டோர் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேசினர். பின்னர் கூட்டாக செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், “அகதிகள் முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு முறையான படிப்பு, வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில்இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்” என்றார். வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்திக்க தயாராக உள்ளேன்” என்றார்.