ஸ்பெல் பீ கையேட்டு வெளியீடு
காட்பாடி ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சொற்களை பிழையின்றி உச்சரிக்கவும், எழுதவும் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பெல் பீ கையேட்டினை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலெட்சுமி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) எஸ். தயாளன், உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வர பிள்ளை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பி. மணி, மதுசூதனா, ஜி. பிரதீஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.