மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்
கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து 1,105 மனுக்கள் பெறப்பட்டன.பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா விற்கு ஆணையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.38,000 மதிப்பீட்டிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், மேலும், இன்றைய தினம் மடக்கு ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனா ளிக்கு உடனடியாக ரூ.3,500 மதிப்பீட்டிலான மடக்கு ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.