சென்னை, மே 30-பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநில சிறப்பு மாநாடு இம்மாதம் 31 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறுகிறது. மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் கவிஞர் சல்மா, வழக்கறிஞர் உ.நிர்மலாராணி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் பி.சுகந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மாநிலப் பொருளாளர் தீபா, மாநில இணைச்செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்று கின்றனர். பாலியல் வன்முறைகளை தடுத்திட மத்திய-மாநில அரசுகளால் இயற்றப்பட்ட சட்டங்களையும், பல்வேறு கமிட்டிகளால் வழங்கப்பட்ட பரிந்துரைகளையும் உறுதியாக அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இந்த சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.